வந்திங்கு பார்த்த பின்னர் புறஞ்
சென்றங்கு பொய் பேசுவர் தமை
கொன்றிங்கு போட்டால் தான் மெய்
வென்றிங்கு வாழும்.
பொய்நீக்கி மெய் பேசும் பண்புடையார் - தலை
கொய்வேனென்று ரைத்தாலும் உயிருக்கஞ்சி
தொய்வான முகத்தோடு வேறுமொழி பேசுவாரோ
பொய்பேசி உயிர்வாழின் அவ்வுயிர் வேண்டாம்மென்று அறியாரோ
உள்ளுணர்வைக் கூர்தீட்டிக்கொள்ள முடியுமா?
2 hours ago
No comments:
Post a Comment