Friday, November 7, 2008

யார் தமிழன் ?

வேல்பிடித்து போர்புரிந்த காலம் தொட்டே
கொள்கை பிடிப்பாய் சுற்றி வந்த கூட்டம் -இன்று
வால்பிடித்து வாழ்வதென்ன அவலம் - ஒரு
கோல் ஊன்றி வாழ்ந்தாலும் வாழலாம் - ஒரு
கொள்கையின்றி வாழ்வதுவும் வாழ்வா?.

எங்கடா வீழ்ந்தாய் தமிழா - நீ
ஏனடா சோர்ந்தாய் தமிழா - தமிழன்
மானத்திற்க்காய் மாண்டதை வரலாறு சொல்லும்
இன்றோ மாயைகளின் பிடியில் மாள்வதை
வரலாறு என்னவென்று கொள்ளும்.

ஆறாத ரணமாய் வலிக்குதடா தம்பி - இந்த
ஆரிய நாய்களை அடித்துவிடு எம்பி
ஆறப்போட்டு போருத்ததெல்லாம் போரும் - உன்
ஆற்றலையெல்லாம் இதுதான் கொண்டுவரும் நேரம்
உற்றத்துனை தமிழுண்டு ஆர்த்தெழுவாய் சிங்கமே

இன்னும் என்ன தயக்கம் - எதை
எண்ணி இந்த மயக்கம் - தொலைத்த
தமிழினத்தை தேடும் படலம் இது - இதை
தடுப்பவர் எவரையும் தொலைக்கும் படலம் இது
சடலமா நீ? சினங்கொள், சீறி எழு

தமிழர் தந்த பிள்ளைகள் நாம் - பிற
ஆரியர் ஆள்வதை பொறுப்பது தவறு
கூரிய முனை கொண்டு உன்னை குத்தி கொன்றாலும்
சீரிய சிந்தனை கொண்டு தமிழன்
உலகுக்கு சொல்லடா.

No comments: