சாதாரண கவுன்சிலர் பதவிக்கே சட்டைய கிழித்து கொண்டு சண்டையை போடும் இந்தகாலத்தில் போட்டியிட்டால் முதல்வர் பதவி நிச்சயம் என்ற நிலையிலும் கூட அரசியல் வேண்டாம் என்ற திடமான முடிவை எடுத்த ரஜினியை பாராட்டாமல் இருக்க முடியாது. கோழை, சுயநலவாதி இப்படி பல பட்ட பெயர்கள் மாற்று ரசிகர்களால் அவருக்கு சூட்டப் பட்டாலும் இன்று அவரது முடிவு பல அரசியல்வாதிகளின் வயிற்றில் பாலை வாற்றி இருக்கிறது என்றால் அது மிகையல்ல . தெரியாத ஒன்றை செய்ய மாட்டேன் என்று சொல்லும் தைரியம் நம்மில் எத்தனை பேருக்கு வரும்.? நாற்காலி கனவுகளில் மிதக்கும் அரசியல் நடிகர்களுக்கு மத்தியில் ரஜினியின் முடிவு துணிச்சலான ஒன்று. காலம் கட்டாயம் இதனை வரலாற்றில் பதிவு செய்யும்.
தன்னறம் இலக்கிய விருது 2025
3 weeks ago
No comments:
Post a Comment