Sunday, November 2, 2008
விடை பெற்றார் அனில்
1999 என்று நினைக்கிறேன்.பாகிஸ்தானோடு இந்திய பலபரிட்சை .அப்போது அடர்த்தியான மீசை வைத்து இருந்த அனில் கும்ப்ளே பந்து வீச வந்தார்.சீட்டு கட்டுகள் சரிவது போல அடுத்தடுத்து பாகிஸ்தான் விக்கட்டுகள் சரிந்தன. ஒரே இன்னிங்க்சில் பத்து விக்கட்டுகள். ஒரு புதிய சாதனை பிறந்தது. இந்தியாவில் பந்து வீச்சாளர்கள் என்றாலே கபில் என்றொரு மாயை இருண்டது. அதனை தனது மட்டையால் மாற்றி காட்டியவர் சச்சின் என்றால் பந்து வீச்சில் மாற்றியவர் அனில். இடது கையால் அவர் பந்தை மேலே தூக்கி போட்டு சுற்றும் போதே எதிராளியின் தலை சுற்ற ஆரம்பித்துவிடும். அதே போன்று அனில் போட வர மாட்டாரா என்று ரன் தாகம் எடுக்க வீரர்கள் காத்திருந்ததும் உண்டு. தாதா கங்கூலி அறிவிப்பை தொடர்ந்து அணிலும் இன்று தனது விலகல் முடிவை வெளியிட்டு இருக்கிறார். மாற்றம் உலக நியதி. இனி கையில் மைக்கோடு அனிலை விரைவில் பார்க்கலாம்.
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
மைக் பிடிக்க அவர் என்ன பாடகரா?
Post a Comment