என்னுடைய பதிமூன்றாவது வயதிலிருந்து மௌன்ட் ரோடு என்று அழைக்கப்படும் அண்ணா சாலையில் பயணித்து கொண்டு இருக்கிறேன்.அசோகர் சாலையின் இருமருங்கிலும் மரங்களை நட்டார் என்ற பள்ளி பாடத்தை மறு பரிசீலனைக்கு ஆளாக்கும் சினிமா விளம்பரங்களை கண்டு இருக்கிறேன். அரசின் அதிரடி அறிவிப்பிற்கு பிறகு கடிவாளம் கழட்டிய குதிரையாக அகண்ட சாலையை அகல கண்ணால் அளந்து இருக்கிறேன். ஆனால் ஒவ்வொரு முறையும் அண்ணா மேம்பாலம் ஏறுவதற்கு முன்னர் நான் கண்டு வியக்கும் விளம்பரம் சிபிசில் நிறுவனத்தின் விளம்பரம் தான் மகாத்மா காந்தியுடைய பொன்மொழிகளை அழகான கார்டூனோடு எழுதி இருப்பார்கள். தற்போதுள்ள வாசகம் நாத்திகர்கள், ஆத்திகர்கள் என அனைவர்க்கும் பொதுவான ஒன்று. என்னுடைய முதல் பதிவாக இதை எழுதுவதில் சந்தோசம்.
There is no God, higher than Truth.
பெண்கள் எழுதுவது…
1 week ago
No comments:
Post a Comment